Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி பேய் படங்களில் நடிக்கப் போவதில்லை… அனபெல் சேதுபதிதான் காரணமா?

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (15:59 IST)
நடிகை டாப்ஸி கடைசியாக நடித்த அனபெல் சேதுபதி திரைப்படம் அட்டர் ப்ளாப் ஆனது.

தெலுங்கு நடிகையான டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ஹசீன் தில்ருபா திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் டாப்ஸி நடித்த அனபெல் சேதுபதி திரைப்படம் வெளியாகி மோசமான வரவேற்பைப் பெற்றது. இதுபற்றி பேசியுள்ள டாப்ஸி ‘நான் பேய் படங்களில் நடிக்க கூடாது என்ற முடிவில் இருந்தேன். ஆனால் இயக்குனர்தான் இது பேண்டஸி படம் என சொல்லி நடிக்க சம்மதிக்க வைத்தார். இந்த கதையை பாலிவுட்டில் சொல்லி இருந்தாலும் நான் நடித்திருப்பேன். இது மறக்க முடியாத அனுபவம். ஆனாலும் இனிமேல் பேய் படங்களில் நடிக்க மாட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments