Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'2.0 படத்தை வெளியிட தமிழ் ராக்கர்ஸ் செயல்படுத்திய டெக்னிக் இதுதான்

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (22:41 IST)
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கெடுபிடி காரணமாகவும், நீதிமன்ற உத்தரவு காரணமாகவும் தமிழகத்தில் உள்ள எந்த தியேட்டரிலும் ஒரு திரைப்படத்தை வீடியோ எடுப்பது என்பது முடியாத காரியம். ஆனாலும் இன்று இரண்டு காட்சிகள் முடிவதற்குள்ளே '2.0' திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளிவந்துவிட்டது அனைவரையும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தமிழ் ராக்கர்ஸ் செயல்படுத்தியுள்ள டெக்னிக்கை அம்பலப்படுத்தியுள்ளார். இந்த படத்தை தெலுங்கில் திரையிடும் தியேட்டரில் வீடியோ எடுத்துவிட்டு, தமிழில் வெளியிடும் தியேட்டரில் ஆடியோவை பதிவு செய்துவிட்டு பின் இரண்டையும் சேர்த்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஒரு திரைப்படத்தை வீடியோ எடுக்க தமிழ்நாட்டு தியேட்டரில்தான் கெடுபிடி இருக்கின்றதே தவிர, ஆந்திராவில் மிக எளிதாக வீடியோ எடுக்கலாம். அந்த வீடியோவில் உள்ள தெலுங்கு ஆடியோவை நீக்கிவிட்டு தமிழில் செல்போன் அல்லது வேறு கருவிகளில் திருட்டுத்தனமாக எடுத்த ஆடியோவை இணைத்துவிட்டால் போதும் என்பதுதான் தமிழ் ராக்கர்ஸின் டெக்னிக். ஒரு டெக்னாலஜியை ஒரு தவறான விஷயத்திற்காக இவ்வளவு தூரம் யோசித்து செயல்படுத்துவதால்தான் இன்னும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை யாரும் நெருங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments