நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பவர் பாண்டி' திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதன் முறையாக இயக்கத்தில் களமிறங்கியுள்ளார்.
தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, மடோனா செபஸ்டியன், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பட்பபிடிப்புகள் நிறைவடைந்து படத்தை அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியிடவிருப்பதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனுஷின் தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை வெளியிடுவதாகவும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் படத்தில் டீசர், டிரைலர், இசை வெளியீடு குறித்த் விவரங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.