Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாள் பார்ட்டியில் ஷங்கருக்கு கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர்கள்!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (10:58 IST)
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் முதலில் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் என சொல்லப்பட்ட இந்த படம் இப்போது ஒவ்வொரு பாகமும் சுமார் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தில் ரண்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஷங்கரின் 60 ஆவது பிறந்தநாள் பார்ட்டி ஒன்று நடந்தது. அதில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் கலந்துகொண்டார்கள். அந்த நிகழ்வில் வேள்பாரி பற்றி பேசப்பட்டதாகவும், அப்போது இயக்குனர்கள் பலரும் வேள்பாரி தமிழ் முகம் உள்ள நடிகர் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஷங்கருக்கு ஆலோசனை சொன்னதாக சொல்லப்படுகிறது. ஷங்கரும் அதுபற்றி ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments