தேசிய விருதுகள் விழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழ்ப் படங்கள்… ரசிகர்கள் அதிருப்தி!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:15 IST)
2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் ஒருசில படங்களை தவிர மற்ற படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை.

தமிழில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை மற்றும் கர்ணன் ஆகிய படங்களுக்கு எந்தவொரு பிரிவிலும் விருதுகள் வழங்கப்படவில்லை. மாறாக மாஸ் மசாலா படங்களான ஆர் ஆர் ஆர் மற்றும் புஷ்பா ஆகிய படங்களுக்கு பல பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆறுதலாக தமிழில் கடைசி விவசாயி திரைப்படத்துக்கு இரண்டு விருதுகளும், தமிழில் உருவாக்கப்பட்ட இரு ஆவணப்படங்களான கருவறை மற்றும் சிறபங்களின் சிற்பங்கள் ஆகியவற்றுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments