Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் மயக்கம்!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (19:23 IST)
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியபோது, கூட்ட நெரிசலில் சிக்கி  நடிகர் டி.ராஜேந்தர் மயக்கம் அடைந்தார்.

சமீபத்தில், தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதில், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய  தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால்   முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது. அரசுடன் இணைந்து, சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலங்களும் உதவிகள் செய்து வருகின்றனர்.

இன்று  நடிகர் விஜய், நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

அதேபோல், நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர்  தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி டி.ராஜேந்தர் மயக்கம் அடைந்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கும்போது மயக்கம் அடைந்த நிலையில், மயக்கம் தெளிந்த பின்னர் நடிகர் டி.ராஜேந்தர் காரில் அழைத்து சென்றனர்.

இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments