Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விபச்சாரத்தில் கைதான நடிகை வீட்டிற்கு செல்ல அனுமதி

விபச்சாரத்தில் கைதான நடிகை வீட்டிற்கு செல்ல அனுமதி
, சனி, 1 நவம்பர் 2014 (11:12 IST)
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு மீட்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்வேதா பாசு அவருடைய தாயாருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து ஹீரோயினாக பல படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. குழந்தை நட்சத்திரமாக இருந்த போது தேசிய விருது வாங்கியிருக்கிறார்.
ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் ஸ்வேதா பாசு விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆறுமாதங்கள் அவர் மீட்பு இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஸ்வேதா பாசுவுடனிருந்த தொழிலதிபருக்கு இதுபோல் எந்தத் தண்டனையும் தரப்படவில்லை.
 
ஸ்வேதாவை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்ற அவரது தாயாரின் மனுவை கீழ்க்கோர்ட் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து செசன்ஸ் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். மீட்பு இல்லத்தில் ஸ்வேதா பாசுவை தங்க வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்ற அவரது வாதத்தை ஏற்று ஸ்வேதா பாசு தனது தாயாருடன் செல்ல நீதிபதி அனுமதியளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil