Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? மருத்துவமனை ஊழியர் அதிர்ச்சி தகவல்!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (17:20 IST)
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அது கொலை என மருத்துவமனை ஊழியர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் தில் பேச்சாரா, எம்.எஸ் தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி இவர் மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுஷாந்தின் காதலி உள்ளிட்ட பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை தொடர்ந்து வருகிறது.

ALSO READ: நிற்காமல் தொடரும் அவதார் 2 படத்தின் வசூல்!

இந்நிலையில் சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்த குழுவில் இருந்த மருத்துவமனை ஊழியர் ரூப்குமார் ஷா என்பவர், சுஷாந்த் சிங் கழுத்திலும், உடலின் பிற பகுதிகளிலும் காயங்கள் தென்பட்டதாகவும், அதை கண்டதுமே கொலை என ஊகிக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்காமல் ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே எடுத்துவிட்டு போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டார்கள் என்றும் அவர் பேசியுள்ளார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments