Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் போன்று வரவேற்பு - சூர்யா பெருமிதம்

Webdunia
புதன், 27 மே 2015 (10:46 IST)
தமிழகம், ஆந்திரா, கேரளா மூன்று மாநிலங்களிலும் தனது படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா. மாஸ் என்கிற மாசிலாமணியின் தெலுங்குப் பதிப்பின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் சூர்யா கலந்து கொண்டார்.
கொச்சியில் இதே படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடந்தது. அதில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சூர்யா. அப்போது பேசிய அவர்,
 
1997 -இல் நேருக்கு நேர் படத்துக்காக விஜய்யுடன் கேரளா வந்தேன். அப்போது விஜய்க்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து பிரமித்தேன். 17 வருடங்களுக்குப் பிறகு அதேபோன்ற வரவேற்பு எனக்கும் கிடைத்துள்ளது. அதற்காக மலையாள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
 
மாஸ் என்கிற மாசிலாமணி தமிழகத்தில் வெளியாகும் அதேநாள் தமிழ் மொழியில் கேரளாவிலும், தெலுங்கில் ஆந்திராவிலும் வெளியாகிறது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments