Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம்க்கு ஆதரவாக நிற்கும் அனைவருக்கும் நன்றி – நடிகர் சூர்யா ட்வீட்!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (16:52 IST)
ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை விவகாரத்தில் ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி என சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா “ஜெய்பீம் திரைப்படத்தின் மீது நீங்கள் அளிக்கும் அன்பு அபிரிமிதமானது. இதற்கு முன்பு இதுபோன்று நான் பார்த்தது இல்லை. நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. ஆதரவாக நிற்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments