Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மக்களுக்காக கொஞ்சம் வேண்டிக்கலாம்! – ட்ரெய்லர் வெளியீட்டில் சூர்யா!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (12:25 IST)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு இன்று நடந்த நிலையில் மேடையில் உக்ரைன் மக்களுக்காக வேண்டிக் கொள்ள சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ப்ரியங்கா மோகன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் மார்ச் 14ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் சூர்யா “உக்ரைனிலிருந்து வரும் ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கும்போது மனது பதைபதைக்கிறது. எல்லாரும் பாதுகாப்பாக தாயகம் திரும்ப சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்வோம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதன்பேரில் சில நிமிடங்கள் அனைவரும் எழுந்து நின்று பிரார்த்தனை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகஸ்ட்டில் தொடங்குகிறதா கமல் - அன்பறிவ் படப்பிடிப்பு.. வாய்ப்பே என சொல்லும் படக்குழு..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல் மகள் மட்டுமல்ல.. கமலும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!

ப்ரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments