Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைகிறதா சூர்யா –மாரி செல்வராஜ் கூட்டணி?

vinoth
சனி, 7 ஜூன் 2025 (09:49 IST)
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

விடுதலை 2 திரைப்படம் ரிலீஸையடுத்து வெற்றிமாறன் தற்போது ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்துக்கான திரைக்கதையை செப்பனிடும் பணியை வெற்றிமாறன் தன்னுடையக் குழுவினரோடு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யா தற்போது வெங்கட் அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே ‘வாடிவாசல்’ தற்போது தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. அதற்குக் காரணம் சூர்யாதான் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் சூர்யா தற்போது குறுகியக் கால படங்களில் அதிகமாக நடிக்க தொடங்கியுள்ளார். அதனால் வாடிவாசல் படத்தில் நடித்தால் அதிக நாட்கள் அந்த படத்துக்குத் தேதிகள் கொடுக்கவேண்டும் என்பதால் தற்போதைக்கு இந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் வெற்றிமாறன் –சிம்பு கூட்டணியில் ஒரு படமாகவும், சூர்யா –மாரி செல்வராஜ் கூட்டணியில் ஒரு படத்தையும் உருவாக்க தாணு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் வெற்றிமாறன் சிம்பு படம் உடனடியாகத் தொடங்கும் என சொல்லப்படுகிறது. சூர்யா மாரி செல்வராஜ் கூட்டணியிலான படம் தற்போதுதான் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments