Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு நிலச்சரிவு.. சூர்யா, ஜோதிகா, கார்த்தி வழங்கிய நிவாரண தொகை இத்தனை லட்சமா?

Mahendran
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (14:53 IST)
வயநாடு நிலச்சரிவால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு நேற்று நடிகர் சூர்யா, இரங்கல் தெரிவித்த நிலையில் தற்போது சூர்யா, ஜோதிகா, கார்த்தி தரப்பில் ஒரு மிகப்பெரிய தொகையை நிவாரண நிதியாக வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மூன்று மலை கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்திருப்பதாகவும் இதுவரை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட  உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விதமாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
 
ஏற்கனவே நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் சில கிரையுலக பிரமுகர்கள் கேரளா நிவாரண நிதியை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வருங்கால கதாநாயகி' லக்‌ஷனா ரிஷி- இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு "எங்க அப்பா" ஆல்பம் இசை விழாவில் பாராட்டு!

ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் வீடியோக் காட்சிகல் இணையத்தில் லீக்… லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்!

பிரபல பாடகியோடு நெருக்கம் காட்டும் ஜெயம் ரவி?... இதுதான் விவாகரத்துக்கு காரணமா?

என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேரவேண்டும் என்று சொன்னால் நான் ஒப்புக் கொள்வேனா?- அரவிந்த் சுவாமியின் கவனம் ஈர்த்த பேச்சு!

நான் சிலரை கைதூக்கிவிட நினைத்தேன்… ஆனால் அவர்கள் என் காலை வாரிவிட்டார்கள் – சார் பட நிகழ்ச்சியில் விமல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments