Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள, கர்நாடக வெள்ள நிவாரண நிதியாக சூர்யா-கார்த்தி கொடுத்த தொகை

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (15:58 IST)
சமீபத்தில் பெய்த கனமழையால் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். 
 
மேலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்த நிலையில் இயற்கை பேரிடர் ஏற்படும் போதெல்லாம் நிவாரண உதவியை முதல் நபராக அளிக்கும் நபர் நடிகர் சூர்யா என்பது தெரிந்ததே. அந்த வகையில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூபாய் 10 லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர் 
 
இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சூர்யா தரப்பிலிருந்து அளிக்கப்பட்டது. கேரள மற்றும் கர்நாடக மாநில மக்களுக்கு சூர்யா நிதி உதவி அளித்ததை அடுத்து கோலிவுட் திரையுலகின் மற்ற நடிகர்களும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, கார்த்தி சகோதரர்களின் இந்த செயலை சமூக வலைதள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments