கேரள, கர்நாடக வெள்ள நிவாரண நிதியாக சூர்யா-கார்த்தி கொடுத்த தொகை

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (15:58 IST)
சமீபத்தில் பெய்த கனமழையால் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். 
 
மேலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்த நிலையில் இயற்கை பேரிடர் ஏற்படும் போதெல்லாம் நிவாரண உதவியை முதல் நபராக அளிக்கும் நபர் நடிகர் சூர்யா என்பது தெரிந்ததே. அந்த வகையில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூபாய் 10 லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர் 
 
இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சூர்யா தரப்பிலிருந்து அளிக்கப்பட்டது. கேரள மற்றும் கர்நாடக மாநில மக்களுக்கு சூர்யா நிதி உதவி அளித்ததை அடுத்து கோலிவுட் திரையுலகின் மற்ற நடிகர்களும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, கார்த்தி சகோதரர்களின் இந்த செயலை சமூக வலைதள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனிமே என் எதிரி நீங்கதான்! புதுசா வந்த 4 பேரை டார்கெட் செய்த பாரு! தாக்குப்பிடிப்பார்களா ஹவுஸ்மேட்ஸ்!

ஓடிடி ரிலீஸூக்குப் பின் அதிகம் ட்ரால் ஆகும் தனுஷின் ‘இட்லி கடை’!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின்!

தமிழ்ப் படங்களில் நானா நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்?... இலியானா எதிர் கேள்வி!

ரஜினியுடன் மோதும் எஸ் ஜே சூர்யா… கோவாவில் முழுவீச்சில் ஜெயிலர் 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments