Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் சூர்யாவும் இணைந்து நடிப்போம் - ஜோதிகா

Webdunia
வெள்ளி, 22 மே 2015 (09:10 IST)
எட்டு வருடங்களுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் நடிப்புக்கு திரும்பியிருக்கிறார் ஜோதிகா. படத்துக்கும், அவருக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பு அவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. முக்கியமாக, தொடர்ந்து நடிப்பது என்ற முடிவை எடுத்துள்ளார்.
பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் படங்களில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து நடித்தனர். இனி அவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பார்களா? இதற்கு ஜோதிகா தெளிவாக பதிலளித்துள்ளார்.
 
இரண்டு இயக்குனர்களிடம் கதை கேட்டிருப்பதாகவும். இருவருக்கும் பத்து மாதம் அவகாசம் தந்திருப்பதாகவும், யார் முதலில் திரைக்கதையை முடிக்கிறார்களோ அவரது இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
 
அடுத்த வருடம் ஜோதிகா, சூர்யா இணைந்து நடிக்கும் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

Show comments