Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சுறுசுறுப்பாகும் பா ரஞ்சித்… சூர்யாவுக்கு கதை ரெடி!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (16:01 IST)
இயக்குனர் பா ரஞ்சித் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

பா ரஞ்சித் மெட்ராஸ் படத்தை இயக்கி முடித்த பின்னர் அடுத்ததாக சூர்யாவை வைத்துதான் இயக்குவதாக இருந்தது. அந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாக பேச்சுவார்த்தை நடந்தது. அதற்குள் ரஞ்சித்துக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்புக் கிடைத்த நிலையில் அந்த கூட்டணி அப்போது தள்ளிப் போனது. அதன் பின்னரும் வரிசையாக இருவரும் வேறு வேறு படங்களில் கவனம் செலுத்தியதால் அந்த படம் அமையவே இல்லை.

இந்நிலையில் இப்போது ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தை முடித்த பின்னர் சூர்யாவோடு இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. இப்போது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து பா ரஞ்சித் ஒரு கதையை உருவாக்கி சூர்யாவுக்கு சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தனுஷின் ராயன் படத்தின் ஆடியோ & டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்!

இந்தியன் படத்தின் ரி ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்!

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments