Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணங்கான் பட துணை நடிகையைத் தாக்கிய நபர்… போலீஸில் புகார்!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (15:40 IST)
சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பில் இயக்குனர் பாலா தரப்பில் இருந்து ஒரு கடிதம் விளக்கக் கடிதம் வெளியானது. அதன்பின்னர் இயக்குனர் பாலா கதையில் சில மாற்றங்களை செய்து அருண் விஜய் நடிப்பில் அதே பெயரில் வணங்கான் படத்தை தொடர உள்ளதாக சொலல்ப்பட்டது. இந்நிலையில் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட கதாநாயகி கீர்த்தி ஷெட்டியும் இப்போது மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமண்யம் விலகிவிட்ட நிலையில் இப்போது ஆர் பி குருதேவ்வை புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

இந்நிலையில் இப்போது அருண் விஜய் நடிப்பில் மீண்டும் வணங்கான் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார் பாலா. கன்னியாகுமரியில் இப்போது ஷூட்டிங் நடந்து வருகிறது. வணங்கான் படத்தை இப்போது இயக்குனர் பாலாவே தயாரித்து வருகிறார். இந்த படத்துக்காக கேரளாவில் இருந்து துணை நடிகர்கள் நடிகைகளை அழைத்து வந்து காட்சிகளை படமாக்கி வருகிறார் பாலா.

இந்நிலையில் கேரளாவில் நடிகர்களை அழைத்துவந்த ஜித்தின் என்பவருக்கும், அழைத்துவரப்பட்ட துணை நடிகையான லிண்டா என்பவருக்கும் சம்பளம் சம்மந்தமாக வாக்குவாதம் நடந்து, ஜித்தின் லிண்டாவைத் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக லிண்டா காவல் நிலையத்தில் ஜித்தின் மீது புகார் கொடுத்துள்ளார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரையில் கால்பதிக்கும் ‘காதல்’ சந்தியா… எந்த சீரியலில் தெரியுமா?

சிங்கிள் இல்ல டபுள்ஸ்… புதிய ட்ரண்ட்டை உருவாக்கும் விஜய் ஆண்டனி!

Breaking Bad & Better call saul சீரிஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… வின்ஸ் கில்லிகன் &ஆப்பிள் டிவியின் புதிய தொடர்!

தனுஷின் அம்பிகாபதி ரி ரிலீஸில் க்ளைமேக்ஸ் மாற்றம்… இயக்குனர் எதிர்ப்பு!

சிரிக்க, சிந்திக்க, வியக்க வைத்தது…வடிவேலுவின் ‘மாரீசன்’ படத்தைப் பாராட்டிய கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments