Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரமாண்ட படம் தோல்வி...மகனுடன் மீண்டும் இணைவாரா சூப்பர் ஸ்டார் ??

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (19:55 IST)
ஆச்சார்யா படம் தோல்வி அடைந்தது குறித்து, மீண்டும் தன் மகனுடன் இணைந்து நடிப்பதும் குறித்தும் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்ததுள்ளார்.

சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படம் கடந்த மாதம் இறுதியில் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 75% வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு கடிதம் எழுதி வருவதாகவும் இதனால் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தேஜா கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆச்சார்யா படத்தின் படுதோல்வியை அடுத்து திரையரங்குகளில் ரிலீஸாகி ஒரு மாதத்துக்குள்ளாகவே ஓடிடியில் வெளியாக உள்ளது. வரும் மே 20 ஆம் தேதி பிரபல ஓடிடியான அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிரஞ்சீவி நடிப்பில், ராம்சரண் தயாரிப்பில் வெளியான ஆச்சார்யா படம் படு தோல்வி அடைந்தது குறித்து, சிரஞ்சீவி பதில் அளித்துள்ளார். அதில், ஆச்சார்யா படத்தின் தோல்வி என்னைப் பாதிக்கவில்லை. இயக்குனர் கூறுயபடி நடித்தேன். அதேபோல் இந்தத் தோல்வி ராம்சரணையும் பாதிக்காது. ஏனென்றால் இப்படத்தின் வெற்றி அவர் கையில் என்பதில்லை என்பது அவருக்குத் தெரியும். ஆனால், நானும் ராம்சரணும் இணைந்தது நடித்தது தோல்வியடைந்தது என்னைப் பாதித்துள்ளது. இதற்காக எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து நடிக்காமல் இருக்கப்போவதில்லை. வாய்ப்பு வந்தால் மீண்டும் இணைவோம் எனத் தெரிவோம்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

நடிகைன்னா தொடணும்னு தப்பான நினைப்பு வருது! - நடிகை நித்யா மேனன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments