Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலகலப்பு 3-ல் இணையும் பிரபல தொழிலதிபர்… அப்டேட் கொடுத்த குஷ்பூ!

vinoth
திங்கள், 18 நவம்பர் 2024 (08:54 IST)
சமீபத்தில் ரிலீஸான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்து அவர்  கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் திடீரென்று கேங்கர்ஸ் என்ற படத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதனால் கலகலப்பு 3 படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இப்போது சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ இதுபற்றிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “அவ்னி சினிமாஸும், பொழுதுபோக்கின் அரசனான சுந்தர் சியும் தொழிலதிபர் கண்ணன் ரவியோடு இணைந்து கலகலப்பு 3 ஐ உருவாக்க உள்ளோம். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்

இந்த கண்ணன் ரவி என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த துபாய் தொழிலதிபர். ஏற்கனவே சாந்தணுவின் ‘இராவணக் கோட்டம்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். சிம்பு தேசிங் பெரியசாமி இணையும் படத்தையும் இவர்தான் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments