இனி நடிப்பதில்லை என்று இயக்கத்துக்கு திரும்பிய சுந்தர் சி. மீண்டும் தனி நாயகனாக நடிக்கிறார்.
சுந்தர் சி.யின் நடிகர் ஆசை தமிழக மக்களுக்கு சோதனையாக அமைந்தது. அந்த சோதனையை அவரும் அனுபவப்பட்ட பிறகு, இனி நடிப்பதில்லை என்று கலகலப்பு படத்தை இயக்கினார். தொடர்ந்து மத கஜ ராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை, ஆம்பள படங்களை இயக்கினார். அதில் அரண்மனையில் மட்டும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில் சென்ற வருடம் மலையாளத்தில் பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வெள்ளிமூங்கா படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க சுந்தர் சி. முடிவு செய்துள்ளார். அரசியல் கலந்த காமெடிப் படமான இதனை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே மோகன்லாலின் பளிங்கு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் வீராப்பில் சுந்தர் சி. நடித்து கெடுத்திருந்தார்.