Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாபலி படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கிய ஸ்டுடியோ கிரீன்

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2015 (16:19 IST)
எஸ்.எஸ்.ராஜமௌலி தெலுங்கில் இயக்கிவரும் பாகுபலி (தமிழில் மகாபலி) படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது.
ராஜமௌலி இயக்கிய மகாதீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. அதேபோல் அவரது ஈகா படம், நான் ஈ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது. அப்படம் நேரடித் தமிழ்ப் படங்களின் வசூலை முறியடித்து வெற்றிகரமாக ஓடியது.
 
ஈகா படத்தையடுத்து அவர் இயக்கி வரும் சரித்திரப் படம் பாகுபலி. மிகப்பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்துக்கு தென்னிந்தியா முழுவதுமே எதிர்பார்ப்பு உள்ளது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
தமிழில் மகாபலி என்ற பெயரில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் யுவி கிரியேஷனுடன் இணைந்து தமிழகத்தில் வெளியிடுகிறது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments