Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாபலி படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கிய ஸ்டுடியோ கிரீன்

மகாபலி படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கிய ஸ்டுடியோ கிரீன்
, வியாழன், 22 ஜனவரி 2015 (16:19 IST)
எஸ்.எஸ்.ராஜமௌலி தெலுங்கில் இயக்கிவரும் பாகுபலி (தமிழில் மகாபலி) படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது.
ராஜமௌலி இயக்கிய மகாதீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. அதேபோல் அவரது ஈகா படம், நான் ஈ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது. அப்படம் நேரடித் தமிழ்ப் படங்களின் வசூலை முறியடித்து வெற்றிகரமாக ஓடியது.
 
ஈகா படத்தையடுத்து அவர் இயக்கி வரும் சரித்திரப் படம் பாகுபலி. மிகப்பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்துக்கு தென்னிந்தியா முழுவதுமே எதிர்பார்ப்பு உள்ளது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
தமிழில் மகாபலி என்ற பெயரில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் யுவி கிரியேஷனுடன் இணைந்து தமிழகத்தில் வெளியிடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil