Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகுபலி படத்தில் இவர்களுக்கு பதில் இவர்கள் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

பாகுபலி படத்தில் இவர்களுக்கு பதில் இவர்கள் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
, வெள்ளி, 5 மே 2017 (06:50 IST)
கடந்த வெள்ளியன்று வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. ரூ.1000 கோடி வசூலை இந்த படம் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.



 


இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று கேரக்டர்களுக்கு சரியான நடிகர்களை எஸ்.எஸ்.ராஜமெளலி தேர்வு செய்ததுதான் என்று கூறினால் அது மிகையாகாது

ஆனால் ஆரம்பத்தில் இவர் ஒருசில கேர்கடர்களுக்கு வேறு சில நடிகர்களை மனதில் வைத்திருந்தாராம். பிரபாசுக்கு பதில் ரித்திக் ரோஷன், ராணாவுக்கு பதில் ஜான் ஆபிரகாம், தமன்னாவுக்கு பதில் சோனம் கபூர், ரம்யாகிருஷ்ணனுக்கு பதில் ஸ்ரீதேவி ஆகியோர் முதலில் பேசப்பட்டார்களாம். கால்ஷீட் பிரச்சனை, சம்பள பிரச்சனை காரணமாக அது நடக்கவில்லையாம்

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தேவசேனா கேரக்டருக்கு அனுஷ்காவை தவிர ராஜமெளலி வேறு யாரையும் அணுகவில்லை என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீரியல் வில்லிக்கு பேனர்! எங்கே செல்கிறது தமிழகம்