Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளை பார்த்து மகிழ்ச்சியானார் எஸ் பி பி… மகன் வெளியிட்ட வீடியோ!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:45 IST)
பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட்  5 ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் மோசமானதை அடுத்து அவருக்கு வெண்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ ஆகிய கருவிகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தினமும் எஸ் பி பி உடல்நிலை பற்றி அவர் மகன் எஸ் பி சரண் தெரிவித்து வந்தார்.

இதையடுத்து நேற்று மருத்துவமனை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் முழுவதும் விழிப்பு நிலையை எட்டிவிட்டார். தொடர்ந்து வெண்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையில் இருக்கிறார். உடல்நிலை சீராக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இன்று எஸ் பி பி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் தந்தையின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், தன் சகோதரி பல்லவியைப் பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments