பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு சிறந்த திரைப்பட பிரமுகர் விருது
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு சிறந்த திரைப்பட பிரமுகர் விருது
திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நடிகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு, மத்திய அரசு சார்பில் சிறந்த திரைப்பட பிரமுகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள 47வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட என பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். பத்மபூஷன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
இந்த விருது பற்றி கருத்து தெரிவித்த எஸ்.பி.பி “இந்த விருது கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த விருது கிடைக்கக் காரணமாக இருந்த திரைத்துறையினர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.