Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா பாடல்களை பாட இயலாது: எஸ்.பி. பால சுப்ரமணியன் அதிரடி!!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2017 (12:49 IST)
தான் இசை அமைத்த பாடல்களை தனது அனுமதியில்லாமல் பாடக்கூடாது என்று இளையராஜாவிடம் இருந்து நோட்டீஸ் வந்திருப்பதாக பிரபல பாடகர் எஸ்.பி. பால சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 


 
 
இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், இரண்டு நாட்களுக்கு முன்பு இளையராஜாவிடம் இருந்து தனக்கும், பாடகி சித்ரா மற்றும் தனது மகன் சரண் ஆகியோருக்கும் நோட்டீஸ் வந்திருக்கிறது. 
 
அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். அபராதத் தொகையும் சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. 
 
எனவே இனி வரும் கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாட இயலாது என்பதற்கான காரணத்தை ரசிகர்கள் அறிந்து கொள்வதற்காக இதைத் தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

பிரபாஸுக்கு உதவி செய்யும் புஜ்ஜி ரோபாவாக கீர்த்தி சுரேஷ்… ஜாலி வீடியோ!

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது விஷாலின் ரத்னம் திரைப்படம்!

தனி ஒருவன் 2 படத்தில் வில்லன் இந்த பாலிவுட் நடிகர்தானா? லேட்டஸ்ட் தகவல்!

கலகலப்பு மூன்றாம் பாகத்துக்குத் தயாரான சுந்தர் சி… ஹீரோயின் இவர்தான்!

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

அடுத்த கட்டுரையில்
Show comments