Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனது தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன்: ராதாரவி உருக்கம்

எனது தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன்: ராதாரவி உருக்கம்
, திங்கள், 19 அக்டோபர் 2015 (04:59 IST)
எனது தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் என பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ராதாதவி கருத்து தெரிவித்துள்ளார்.


 

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
 
தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், இரண்டு துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், நடிகர்கள், நாடக நடிகர்கள் அனைவரும் ஆர்வமாக வாக்குகளை பதிவு செய்தனர்.
 
இதையடுத்து, மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்பு 9 அணி அளவில் வெற்றி வாய்ப்பு அறிவிக்கப்பட்டது. முதலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றதாக அரிவிக்கப்பட்டது.
 
இந்த வெற்றி குறித்து, நடிகர் ராதாரவி கூறுகையில், இந்தத் தேர்தலில் சகோதரர் விஷாலின் கடும் உழைப்புக்கு பரிசாக வெற்றி கிடைத்துள்ளது. அவர் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகிறேன். எனது தோல்வியை ஏற்றுக் கொண்டு, வெற்றிப் பெற்றவர்களை மீண்டும் வாழ்த்துகிறேன்" என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil