Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் என்னை காமெடி வேடத்தில் நடிக்கக் கூப்பிட மாட்டார்- சூரி ஓபன் டாக்!

vinoth
வியாழன், 22 மே 2025 (10:26 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மே 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவரிடம் ‘சிம்புவுக்காக சந்தானம் காமெடி வேடத்தில் மீண்டும் நடிக்கிறார். அது போல சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் மீண்டும் காமெடி வேடத்தில் நடிப்பீர்களா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சூரி “நானே அதற்கு சம்மதம் சொன்னாலும், சிவா தம்பி அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார். அவர் என்னிடம் “அண்ணே இனிமே நாம சேர்ந்து நடிப்பதாக இருந்தால், இருவருக்கும் சமமான முக்கியத்துவம் உள்ள கதையில்தான் நடிக்கனும்” என்று சொல்லியுளார். அப்படி ஒரு கதையமைந்தால் கண்டிப்பாக நாங்கள் இணைந்து நடிப்போம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழ்க்கை என்னவென்று உணரவிரும்பினல்… இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!

ரஜினியின் அடுத்த படம் யாருடன்… இறுதிப் பட்டியலில் இரண்டு இயக்குனர்கள்!

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க துருவ் விக்ரம்மிடம் பேச்சுவார்த்தை!

பவன் கல்யாண் படத்தால் நடந்த மாற்றம்… விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments