குழந்தை பருவத்தில் தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பிரபல நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவர் சோனம் கபூர். நடிகர் அனில் கபூர் மகளான இவர் தனுஷ் நடித்த முதல் ஹிந்தி படமான அம்பிகாபதியில் அவருக்கு நாயகியாக நடித்தவர் இவர்.
சோனம் கபூர் மீது பாலிவுட் நடிகர் நடிகைகள் எப்போதுமே கோபமாகவே இருப்பார்கள். காரணம் அவரது வெளிப்படையான பேச்சுதான். சமீபத்தில் கூட என்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் செக்ஸ் வைத்துகொள்வது கிடையாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனது தம்பி குறித்து கூறுகையில், எனது தம்பி அவரது காதலியுடன் பாதுகாப்பான முறையில் உறவு வைத்துகொள்வார் என்று நம்புகிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வர் பேசுகையில், தான் சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளனதாக தெரிவித்தார். இவரது இந்த பேச்சால் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.