Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கண்கலங்கிய சினேகா

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கண்கலங்கிய சினேகா
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (11:37 IST)
சினேகா தனது பிறந்த நாளை நேற்று திறன்குன்றியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.  

ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலோ அல்லது திறன்குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடி வருகிறார் சினேகா. இந்த வருடமும் அப்படியே தனது பிறந்தநாளை கொண்டாடினார்.


 

நேற்று அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி கொளத்தூரில் உள்ள ஸ்ரீ அருணோதயம் சாரிட்டபிள் ட்ரஸ்ட்டில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகள் மத்தியில் தனது கணவர் பிரசன்னாவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். குழந்தைகள் மத்தியில் கேக் வெட்டியவர், அவர்களுக்கு கேக் ஊட்டியும் உணவு பரிமாறியும் மகிழ்ந்தார்.

நிறைவாக ட்யூப் மூலமாக உணவு பெற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள குழந்தைகள் நிரம்பிய அறைக்கு சென்ற சினேகா அவர்களின் நிலையைப் பார்த்ததும் தாங்க முடியாமல் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். மகிழ்வாக கொண்டாட வந்தவர் அழத்தொடங்கியதும் அங்கு பணிபுரிந்த  ஊழியர்களும் கலங்கிவிட்டனர். பின் பிரசன்னா  அவரைத் தேற்றி அழைத்து வந்து காரில் உக்கார வைத்து அழைத்துச் சென்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil