Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாத சிவகார்த்திகேயன்… அடுத்தடுத்த படங்கள் ரிலீஸில் சிக்கல்?

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (16:12 IST)
நடிகர் சிவகார்த்திகேயனின் சில படங்கள் தோல்வி அடைந்ததால் அவர் மேல் பெரும் தொகை கடனாக விழுந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சில படங்கள் தோல்வி அடைந்ததால் பல கோடி ரூபாய் கடனாளி ஆனார். அந்த தொகையை அவர் நான்கு தவணையாக கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதில் ஒரு தவணையை மட்டுமே சிவகார்த்திகேயன் கொடுத்ததாகவும், அடுத்தடுத்த தவணைகளை கொடுக்காததால் பணம் கொடுத்தவர்கள் அடுத்தடுத்த படங்களின் ரிலீஸின் போது இது சம்மந்தமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் நேரத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தோனி க்ரவுண்ட்ல இறங்குன மாதிரி இருந்துச்சு! வட இந்தியாவில் தனுஷிற்கு கிடைத்த க்ளாப்ஸ்! – வியந்து சொன்ன நடராஜன்!

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!

ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!

சென்னை ஐஐடியோடு இணைந்து இசை ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் இளையராஜா!

ஜூனியர் NTR நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments