Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்ட் 2 படங்கள் நடிப்பதில் பயம்… ஆனா அந்த படம் மட்டும் நடிக்க ஆசை- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (08:39 IST)
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீரன் திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கிய முதல் படத்துக்கும் இரண்டாம் படத்துக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது.

இரண்டாவது படத்தில் அவர் சிவகார்த்திகேயன் என்ற மாஸ் ஹீரோவுக்காக சமாதானங்கள் செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. மிகப்பெரிய வெற்றி இல்லை என்றாலும் ‘மாவீரன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயனிடம் அவர் நடித்த படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசை என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “எனக்கு இரண்டாம் பாகங்களில் நடிப்பதில் பயம் உண்டு. ஏனென்றால் அது முதல் பாகத்தின் வெற்றிக்கு நியாயம் செய்யும் விதமாக அமையவேண்டும். அப்படி ஒரு படம் நடிக்கவேண்டும் என்றால் நான் மாவீரன் படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிராம்குமார் & விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகி ஆகும் ருக்மிணி வசந்த்!

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

மாளவிகா மோகனன் நடிக்கும் 3 திரைப்படங்கள்.. இன்று ஒரே நாளில் வெளியான 3 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள்..!

நந்திதாவா இது?.. கிளாமர் உடையில் ஆளே அடையாளம் தெரியாமல் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments