Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தம்… அயலான் இயக்குனருக்கு கைவிரித்த சிவகார்த்திகேயன்!

Webdunia
புதன், 3 மே 2023 (07:40 IST)
இன்று நேற்று நாளை படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் ரவிக்குமார். அதன் பின்னர் அவர் இயக்கிய அயலான் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. தமிழ் திரையுலகின் முதல் டைம் மிஷின் திரைப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அதையடுத்து இப்போது உருவாக்கி வரும் அயலான் படமும் ஒரு அறிவியல் புனைவுக் கதைதான். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை படக்குழு செலவிட்டுள்ளது.


இப்போது அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் ரவிக்குமார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் சிலபல காரணங்களால் இப்போது கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இயக்குனர் ரவிகுமார் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது அடுத்தடுத்து முருகதாஸ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதால், இப்போதைக்கு தேதிகள் ஒதுக்க முடியாது என ரவிக்குமாரிடம் சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாகவும், அதனால் அவர்கள் மீண்டும் இணையும் படம் உருவாவதில் தாமதம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மகன் சீக்கிரமே இயக்குனர்… எனக்கும் ஒரு வாய்ப்புண்டு – பார்த்திபன் மகிழ்ச்சி!

கூலி படத்தில் அமீர்கான் வரும் காட்சிகள் எத்தனை நிமிடம்?... அவரே வெளியிட்ட தகவல்!

ராமாயணம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

சூர்யா 45 படத்தின் டீசர் & டைட்டில் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

என்னிடம் எப்போதும் என் தாத்தாவைப் பற்றி மட்டுமே கேட்பார்கள்.. வேறு கேள்வியே இல்லையா –யதீஷ்வரன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments