Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! யார் படத்தில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (08:59 IST)
தெலுங்கில் பவண் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தி மற்றும் தமிழில் உருவான பிங்க் படத்தின் தெலுங்கு பதிப்பில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் நடிக்க இருக்கிறார். அரசியலுக்காக சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் மீண்டும் படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழில் தயாரித்த போனி கபூரே வேறு ஒரு முக்கிய தயாரிப்பாளரோடு இணைந்து இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு வக்கீல் சாப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வானம் படத்தின் இயக்குனர் கிரிஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கும் பொருட்டு பல மொழி கலைஞர்கள் அதில் இடம்பெறுவார்கள் என சொல்லப்படுகிறது. இதனால் தமிழில் இருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கில்லி’ பக்கத்தில் கூட வரமுடியாது.. ‘சச்சின்’ வசூல் இவ்வளவுதான்..!

விஜய்சேதுபதி மகனின் முதல் படம்.. ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!

‘மதகஜ ராஜா’ திரைப்படம் ஏன் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை: படக்குழு விளக்கம்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஹோம்லி லுக்கில் ஷிவானி நாராயணனின் லேட்ட்ஸ்ட் புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments