Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தின் டைட்டிலுக்காகக் காத்திருக்கும் படக்குழு… எப்போது வெளியாகும்?

vinoth
திங்கள், 3 பிப்ரவரி 2025 (09:22 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இடையில் சல்மான் கான் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றதால் அந்த படத்தில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தைத் தொடங்கவுள்ள முருகதாஸ் மீதமுள்ள காட்சிகளை அடுத்த மாதத்துக்குள் முடிக்கவுள்ளாராம்.

இந்த படத்துக்காக படக்குழு தேர்வு செய்திருந்த தலைப்பு வேறொரு தயாரிப்பாளரிடம் உள்ளதாம். அவரைத் தொடர்புகொண்டு அவரிடம் அனுமதிப் பெறுவதற்காகப் படக்குழு காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவரிடம் சம்மதம் பெற்றதும் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments