Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தின் டைட்டிலுக்காகக் காத்திருக்கும் படக்குழு… எப்போது வெளியாகும்?

vinoth
திங்கள், 3 பிப்ரவரி 2025 (09:22 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இடையில் சல்மான் கான் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றதால் அந்த படத்தில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தைத் தொடங்கவுள்ள முருகதாஸ் மீதமுள்ள காட்சிகளை அடுத்த மாதத்துக்குள் முடிக்கவுள்ளாராம்.

இந்த படத்துக்காக படக்குழு தேர்வு செய்திருந்த தலைப்பு வேறொரு தயாரிப்பாளரிடம் உள்ளதாம். அவரைத் தொடர்புகொண்டு அவரிடம் அனுமதிப் பெறுவதற்காகப் படக்குழு காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவரிடம் சம்மதம் பெற்றதும் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ரெட்ரோ’ வெற்றி அடைந்தால் தான் வாய்ப்பு.. கார்த்தி சுப்புராஜூக்கு செக் வைத்த பிரபல நடிகர்..!

படமே இல்லாமல் இருந்த இயக்குனர். கார்த்தி வாய்ப்பு கொடுத்தும் கடுப்பேத்தியதால் பரபரப்பு..!

திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்.. என்ன காரணம்?

அழகுப் பதுமை மாளவிகாவின் க்யூட் புகைப்படங்கள்!

பாபநாசம் படப்புகழ் எஸ்தர் அணிலின் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments