Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கிய சிவகார்த்திகேயன் & முருகதாஸ் பட ஷூட்டிங்!

vinoth
செவ்வாய், 16 ஜூலை 2024 (09:26 IST)
ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு சிங்கநடை எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்துள்ள முருகதாஸ் இப்போது மீண்டும் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தூத்துக்குடியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங் இடைவேளையில்தான் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் கோயில் வழிபாடு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments