Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்களுக்குள் எதுவுமில்லை - தனுஷுடனான லடாய் பற்றி சிவகார்த்திகேயன்

எங்களுக்குள் எதுவுமில்லை - தனுஷுடனான லடாய் பற்றி சிவகார்த்திகேயன்

எங்களுக்குள் எதுவுமில்லை - தனுஷுடனான லடாய் பற்றி சிவகார்த்திகேயன்
, வியாழன், 21 ஜூலை 2016 (11:41 IST)
நேற்று நடந்த முடிஞ்சா இவன பிடி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி மூவரும் கலந்து கொண்டனர்.



சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையே லடாய், அதனால்தான் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரௌடிதான் படத்தை தனுஷ் தயாரித்தார் என்று வதந்திகள் வளைய வந்த கொஞ்ச நாளில், சம்பந்தப்பட்ட மூவருமே ஒரே மேடையில்.

விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கும் ஆச்சரியம்தான். மூவரையும் ஒரே மேடையில் பார்ப்பது சந்தோஷம் என்று அவர்கள் பேச, சிவகார்த்திகேயன் அவர்களுக்கு தனது பேச்சில் பதிலளித்தார்.

"நிறைய பேர் நான், தனுஷ் சார், விஜய் சேதுபதி மூவரையும் ஒரே மேடையில் பார்ப்பது சந்தோஷம் என்றார்கள். எங்கள் மூவருக்கும் ஒன்றுமில்லை. அடிக்கடி பேசிக் கொள்வோம். எனக்கு ரொம்ப பக்கபலமாக இருந்து தோள் கொடுத்தவர் தனுஷ் சார்" என்று சம்பிரதாயமான ஒரு பிட்டை போட்டு சந்தோஷ பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் 60 - இதுவரை முடிந்தது என்ன?