Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் கதையே முடிவாகல… ஆனா பட்ஜெட் மட்டும் 100 கோடி – வெங்கட் பிரபுவின் அடுத்த பட அப்டேட்!

vinoth
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (10:29 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெங்கட்பிரபு சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு என பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இப்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு வெங்கட்பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படம் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான கதையே இன்னும் முடிவாகவில்லையாம். ஆனால் அதற்குள் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என திட்டமிட்டு விட்டார்களாம். அதில் சிவகார்த்திகேயன் சம்பளம் 40 கோடியாகவும், வெங்கட்பிரபுவின் சம்பளம் 20 கோடியாகவும் இருக்கும் என திட்டமிட்டுள்ளனராம். கோட் படத்தின் முடிந்த பின்னர் இந்த பட வேலைகளை வெங்கட்பிரபு தொடங்குவார் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

நெட்பிளிக்ஸில் 2 கோடி பார்வைகளைக் கடந்து வெற்றிநடை போடும் மகாராஜா!

இரண்டாவது நாளில் பெரிய அளவில் சரிந்த தேவரா வசூல்!

தனது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments