Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்கள் உச்சியை குளிர வைத்த அம்மா - முதல்வருக்கு பிரபுவின் நன்றி

எங்கள் உச்சியை குளிர வைத்த அம்மா - முதல்வருக்கு பிரபுவின் நன்றி
, வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (13:20 IST)
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என நேற்று முதல்வர் சட்டசபையில் அறிவித்ததும், உடனடியாக அது குறித்து தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார் சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு. 

"எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அம்மா அறிவித்து இருப்பது எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் திலகத்தின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருக்கிறார்கள். 
 
எங்களின் உச்சியை குளிர வைத்த அம்மாவுக்கு எனது சார்பிலும், அண்ணன் ராம்குமார் சார்பிலும், மகன் விக்ரம்புரபு சார்பிலும் மற்றும் குடும்பத்தினரின் அனைவரது சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

Share this Story:

Follow Webdunia tamil