Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வழிவிடு... சிம்ரன் போலீஸ் வர்றாங்க

வழிவிடு... சிம்ரன் போலீஸ் வர்றாங்க
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (15:17 IST)
நடிகை சிம்ரன் கொஞ்சநாள் முன்பு, தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.


 

 
தொலைக்காட்சி தொடர்களுடன் திரைப்படங்களையும் தனது நிறுவனம் தயாரிக்கும் என அப்போது அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை வரும் மாதத்தில் நடைமுறைப்படுத்துகிறார் சிம்ரன்.
 
சிம்ரனின் கணவர் தீபக் தயாரிக்கும் இந்தப்படத்தை கௌரி சங்கர் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். சிம்ரன்தான் படத்தின் நாயகன், நாயகி எல்லாம்.
 
ராணி முகர்ஜியின் கணவர் ஆதித்ய சோப்ரா அவருக்காக மர்தானி என்ற போலீஸ் படத்தை தயாரித்தார் அல்லவா? அதேபோல் தீபக் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் மர்தானி ராணி முகர்ஜிபோல் அதிரடி போலீஸாக நடிக்க உள்ளார்.
 
இந்தத் தகவலை பகிர்ந்து கொண்ட கௌரி சங்கர், நவம்பர் முதல் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil