Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

Mahendran
திங்கள், 2 ஜூன் 2025 (16:14 IST)
நடிகர் சிம்புவுக்கு நான்கு படங்களில் சம்பளமாக 200 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும், அந்த பணத்தை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ படத்தில் அவர் முதலீடு செய்து தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
கமலஹாசனுடன் சிம்பு நடித்த தக்லைப் திரைப்படத்திற்காக, அவருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் மற்றும் இன்னொரு பிரபல தெலுங்கு தயாரிப்பாளரின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ஆகிய மூன்றுக்கும் சேர்த்து, 160 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு கிடைத்ததாகவும், மொத்தத்தில் நான்கு படங்களில் 200 கோடி ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த பணத்தை அப்படியே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘எஸ்டிஆர் 50’ திரைப்படத்தில் முதலீடு செய்வதாகவும், இந்த படத்தை அவரே முழுமையாக தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments