Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் இல்லாமல் தவிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்… அப்ப இதுக்கு ஒரு எண்டே இல்லையா?

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (12:38 IST)
சிம்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்துக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தைத் தொடங்குவதில் சிம்புவின் முந்தைய படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் மூலமாக ஒரு சிக்கல் எழுந்தது. முன்னதாக ஐசரி கணேஷிடம் தொடர்ந்து 2 படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை போட்டிருந்தார் சிம்பு. அதன்படி ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்துள்ளார். அடுத்த படத்தில் நடிப்பதற்குள் இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நடிக்க சென்றுவிட்டார்.

அதனால் தங்கள் கம்பெனிக்கு முடித்துக் கொடுக்காமல் வேறு கம்பெனி படத்தில் நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்திருந்தார். இதையடுத்து பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சமாதானம் ஆன நிலையில் இப்போது சிம்பு வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு 60 நாட்களை கால்ஷீட் கொடுத்துள்ளாராம். ஆனால் அந்த படத்தை இயக்க இயக்குனர் இன்னும் முடிவாகததால் படத்தை தொடங்க முடியாமல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments