Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு பிரச்சனையில் சிம்புவுக்காக இறங்கும் தயாரிப்பாளர்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (09:56 IST)
நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்துக்கு வழக்கம் போல அவரின் படங்களுக்கு ஏற்படும் பிரச்சனை உருவாகியுள்ளது.

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிம்பு ஏற்கனவே நடித்த சில படங்களின் தோல்வி அவரது மாநாடு படத்திற்கு பெரும் சிக்கலாக உள்ளது என்பதும்ம் இது குறித்து பஞ்சாயத்து தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்புவின் மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்தால் முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன் என டி ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனையை சரி செய்ய தயாரிப்பாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சிம்புவின் பெறோரின் பேச்சு சலசலப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் இப்போது சிம்பு மும்பையில் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் சிம்புவுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உள்ள பிரச்சனையை தீர்க்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களத்தில் இறங்கியுள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments