Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டப்பிங் பணியை ஆரம்பித்தார் சிம்பு: எந்த படத்திற்கு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (08:11 IST)
டப்பிங் பணியை ஆரம்பித்தார் சிம்பு: எந்த படத்திற்கு தெரியுமா?
சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது
 
இந்த நிலையில் சிம்பு ‘பத்து தல’ என்ற திரைப் படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார் என்பதும் அதனை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிம்பு ஏற்கனவே நடித்து முடித்துள்ள திரைப்படம் ’மஹா’. ஹன்சிகா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் சிம்பு முதலில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக இருந்தது. அதன் பின் அவருடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் கிட்டத்தட்ட இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருவதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளை சிம்பு முடித்துக் கொடுத்துள்ளார் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் முடிவு செய்து விட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments