Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய விருது உறுதி… சிம்புவுக்கு நம்பிக்கை அளித்த கதை!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (17:35 IST)
சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மதியம் வெளியான நிலையில் சிம்பு ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். எரியும் காட்டில் பாலா பட ஹீரோ கணக்காக சிம்பு கோல் ஒன்றுடன் நிற்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக இந்த படத்தை ஒரு காதல் படமாக உருவாக்கதான் கௌதம் முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போது அதிரடி ஆக்‌ஷன் கதையாக மாற்றியுள்ளரனாம். அதனால்தான் தலைப்பு கூட மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வெறுமனே ஆக்‌ஷன் கதையாக மட்டும் இல்லாமல் உணர்ச்சிபூர்வமான கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த கதையைக் கேட்ட சிம்பு தனக்கு கண்டிப்பாக ஒரு தேசிய விருது கிடைக்கும் என்ற உறுதியாக நெருங்கிய வட்டத்தினரிடம் சொல்லி வருகிறராம்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபாஸ் படத்தில் வில்லன், வில்லியாக சைஃப் அலிகான் & கரீனா கபூர்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவரா?

பூஜா ஹெக்டேவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா 44 படக்குழு!

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments