Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முப்பதே நாட்களில் முடிகிறது சிம்புவின் அடுத்த படம்: இயக்குனர், கதை ரெடி!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (18:34 IST)
முப்பதே நாட்களில் முடிகிறது சிம்புவின் அடுத்த படம்: இயக்குனர், கதை ரெடி!
நடிகர் சிம்பு தற்போது ’மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கூட்டம் கூட்டமாக இருக்கும் காட்சிகளாக இருப்பதால் தற்போதைய அரசின் கெடுபிடியால் இந்த காட்சிகளை படமாக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து சிம்பு குறுகிய காலத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்றும், இந்த படம் சுசீந்திரன் இயக்க உள்ள கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படத்தில் கல்லூரி மாணவி ஒருவர் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முப்பதே நாட்களில் முடிக்க இயக்குனர் சுசீந்திரன் திட்டமிட்டுள்ளார் என்றும் கதை மற்றும் திரைக்கதை லொகேஷன் என அனைத்தும் தயாராக இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
சுசீந்திரன் இயக்கத்தில் ஏற்கனவே பல பிரபல நடிகர்கள் நடித்து இருக்கும் நிலையில் தற்போது சிம்புவும் அந்த வரிசையில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments