Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியில் பேசி டார்ச்சர்; விமான நிலைய அதிகாரிகள் மீது சித்தார்த் புகார்!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (12:29 IST)
பிரபல தமிழ் நடிகரான சித்தார்த் மதுரை விமான நிலையம் சென்றபோது சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் மோசமாக நடந்து கொண்டதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சித்தார்த். அவ்வபோது இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் தனக்கு மதுரை விமான நிலையத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஆள் இல்லா விமான நிலையத்தில் ‘சிஆர்பிஎஃப்’ அதிகாரிகள் தங்களை சோதனை செய்ததாகவும், அப்போது இந்தியில் பேசி அவர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். அவரது பெற்றோர் பையில் வைத்திருந்த சில்லறை காசுகளை கூட எடுக்க சொன்னதோடு, ஆங்கிலத்தில் பேச சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து இந்தியில் பேசியதோடு, இந்தியாவில் இப்படிதான் இருக்கும் என்றும் கூறியதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தை காட்டுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments