Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்நியர்களுக்கு காட்டுகிற கரிசனத்தை நம்மவர்களுக்கு காட்டலாமே...?

அந்நியர்களுக்கு காட்டுகிற கரிசனத்தை நம்மவர்களுக்கு காட்டலாமே...?
, திங்கள், 5 டிசம்பர் 2016 (14:38 IST)
எஸ் 3 படம் டிசம்பர் 16 வெளியாவதாக இருந்தது டிசம்பர் 23 -க்கு தள்ளிப் போனது. பணத்தட்டுப்பாடே இதற்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் நாயகன் சூர்யா வேறொரு காரணம் சொல்லியிருக்கிறார்.

 
தெலுங்கில் ராம் சரண் தேஜா நடித்த துருவா படம் (தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்) டிசம்பர் 9 வெளியாகிறது. டிசம்பர் 16 எஸ் 3 (தெலுங்கில்) வெளியானால் துருவா பாதிக்கப்படும். ராம் சரண் தேஜா எங்கள் குடும்ப உறுப்பினர் போல. அவரது படத்துக்கு பாதிப்பு கூடாது என்றுதான் படவெளியீட்டை தள்ளி வைத்தோம் என்றிருக்கிறார்.
 
டிசம்பர் 23 கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட பார்த்திபன் உள்ளிட்ட பல உள்ளூர் vipகள் திட்டமிட்டுள்ளனர். எஸ் 3 தேதி தள்ளி வைக்கப்பட்டதால் இந்தப் படங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா ராம் சரண் தேஜாவுக்காக கவலைப்படும் சூர்யாவுக்கு உள்ளூர் பார்த்திபன் போன்றவர்களின் சிரமம் கண்ணுக்கு தெரியாமல் போனது எப்படி?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட, இந்திக்குப் போகிறதாம் ரெமோ