Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் பிறந்தநாளில் தொடங்கியது பொன்ராம் & சண்முகபாண்டியன் இணையும் படத்தின் ஷூட்டிங்!

vinoth
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (10:14 IST)
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’. அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய ரஜினிமுருகன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

அதையடுத்து பொன் ராம் இயக்கிய எம் ஜி ஆர் மகன் மற்றும் DSP ஆகிய இரு படங்களும் படுதோல்வி படங்களாக அமைந்தன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் இப்போது தயங்குகின்றனர். இந்நிலையில் அவர் தன்னுடைய அடுத்த படத்தை மறைந்த நடிகர் விஜய்காந்தின் மகன் சண்முக பாண்டியனை வைத்து இயக்கவுள்ளார்.

நேற்று கேப்டன் பிறந்தநாளில் இந்த படத்தின் பூஜையோடு ஷூட்டிங் தொடங்கியுள்ளது. அதில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன் திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயம் ரவியின் ‘பிரதர்’திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு: ரசிகர்கள் குஷி..!

தளபதி விஜய்யின் கோட் படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக “சார்” படத்தை வெளியிடுகிறது!!

அந்நியன் ரீமேக்கில் ரண்வீர் சிங்கா?... விக்ரம் அளித்த பதில்!

விபத்தில் சிக்கிய ராஷ்மிகா இப்போது எப்படி இருக்கிறார்?... அவரே வெளியிட்ட பதிவு!

விஜய்யை அடுத்து சூர்யாவுடனும் கூட்டணியா… பிரசாந்தின் அடுத்த பட அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments