Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவதார் போல உலகம் போற்றக்கூடிய படமாக வேள்பாரி வரும்- இயக்குனர் ஷங்கர் நம்பிக்கை!

vinoth
சனி, 12 ஜூலை 2025 (08:13 IST)
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கதையை அவர் 1000 கோடி ரூபாயில் மூன்று பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை ஹீரோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் வேள்பாரி நாவலின் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை சார்பாக நடத்தப்பட்ட வெற்றிவிழாவில் கலந்துகொண்ட ஷங்கர் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

அதில் “இதுவரை எந்திரன்தான் என்னுடையக் கனவுப்படமாக இருந்தது. ஆனால் இப்போது  ‘வேள்பாரி’ படம்தான் என்னுடையக் கனவுப்படமாக உள்ளது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்றும் அவதார் போன்று உலகம் போற்றக் கூடிய காவியமாக வருவதற்கானக் கூறுகள் இந்த நாவலில் உள்ளன. அது சீக்கிரமே நடக்கும் என நம்புவோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments